ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக நீடிக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அஜய் மேகன் கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான அஜய் மேகன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ராஜஸ்தான் மாநிலத்தின் பொறுப்பாளராக நீடிக்க விரும்பவில்லை என்றும் புதிய பொறுப்பாளரை நியமிக்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் தேர்தலின்போது ராஜஸ்தான் அரசியலில் நிலவிய குழப்பங்கள் குறித்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைய சூழலில் ராஜஸ்தானுக்கு புதிய பொறுப்பாளர் தேவை, ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம்(பாரத் ஜோடோ) விரைவில் ராஜஸ்தானை அடைய உள்ள நிலையில் மாநிலத்திற்கு புதிய பொறுப்பாளரை நியமிக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் போட்டிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவதாக இருந்தது. இதனால் ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட் பெயர் அடிபட்ட நிலையில் அசோக் கெலாட் ஆதரவாளர்கள் சச்சின் பைலட்டுக்கு எதிராகக் கிளம்பினர். இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி அசோக் கெலாட்டே ராஜஸ்தான் முதல்வராக நீடிக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 41 லட்சம் பறிமுதல்

தமிழில் உயர்கல்வி: என்ன தீர்வு ?முதல் செயல்திட்டம்!

சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?

தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

