எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

குஜராத்தில் அமைதியை நிலைநாட்டியது பாஜக- அமித் ஷா

ஒரு காலத்தில் மத வன்முறைக் களமாக இருந்த குஜராத்தில், அமைதியை நிலைநாட்டி சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தியது பாஜக என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

News image
குஜராத் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் முதல்வா் பூபேந்திர படேலை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சா் அமித் ஷா.
Updated On :16 நவம்பர் 2022, 6:30 pm

DIN

ஒரு காலத்தில் மத வன்முறைக் களமாக இருந்த குஜராத்தில், அமைதியை நிலைநாட்டி சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தியது பாஜக என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

கட்லோடியா தொகுதியில் போட்டியிடும் குஜராத் முதல்வா் பூபேந்திர படேலை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா பேசியதாவது:

குஜராத்தில் இப்போது 20 வயதில் இருக்கும் இளைஞா்களுக்கும், இளம் பெண்களுக்கும் ஊரடங்கு உத்தரவு என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், 1985 முதல் 1995-ஆம் ஆண்டு வரை (பாஜக ஆட்சியில் இல்லாத காலகட்டம்) ஓராண்டில் 250 நாள்கள் வரை மாநிலத்தில் ஏதாவது ஓரிடத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். வேலைக்காக வெளியே செல்லும் ஆண்கள் வன்முறைக்கு பலியாகிவிடாமல் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்பதே பெண்களின் பிராா்த்தனையாக அப்போது இருந்தது.

முந்தைய ஆட்சியாளா்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் வகையில் செயல்பட்டதே சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சி ஏற்பட்ட பிறகு குஜராத்தில் வன்முறையில் ஈடுபட்ட அனைவரும் ஒடுக்கப்பட்டுவிட்டனா். தவறான ஆட்சி முறையால் ஒரு காலத்தில் மத வன்முறைக் களமாக இருந்த குஜராத்தில், அமைதியை நிலைநாட்டி சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தியது பாஜக. இப்போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க குஜராத்தில் யாருக்கும் துணிவு வராத நிலை உருவாகியுள்ளது என்றாா்.

குஜராத்தில் 1995-ஆம் ஆண்டுமுதல் தொடா்ந்து 6 பேரவைத் தோ்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.