வேட்புமனு தாக்கல் செய்தார் குஜராத் முதல்வர்!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முதல்வர் பூபேந்திர படேல் இன்று தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்தார் குஜராத் முதல்வர்!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முதல்வர் பூபேந்திர படேல் இன்று தாக்கல் செய்தார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி பிரசாரத்தை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், கட்லோடியா தொகுதியில் போட்டியிடவுள்ள முதல்வர் பூபேந்திர படேல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பூபேந்திர சிங் முதல்வராக தொடர்வார் என ஏற்கெனவே அமித் ஷா தெரிவித்திருந்தார்.

முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், முதல்வா் வேட்பாளா் குறித்து எவ்வித அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வா் வேட்பாளராக இசுதான் கட்வி அறிவிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com