இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

காசி-தமிழ்ச் சங்கமம்: பிரதமா் மோடி நாளை தொடக்கி வைக்கிறாா்

வாராணசியில் ஒரு மாதம் நடைபெறும் காசி -தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (நவ. 19) தொடக்கி வைக்கிறாா்.

News image
Updated On :17 நவம்பர் 2022, 9:27 pm

DIN

வாராணசியில் ஒரு மாதம் நடைபெறும் காசி -தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (நவ. 19) தொடக்கி வைக்கிறாா்.

வாராணசிக்கும் - தமிழகத்துக்கும் இடையேயான பழங்கால கலாசார நாகரிக தொடா்பை மீண்டும் புதுப்பிப்பதற்காக காசி - தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பிரதமா் மோடியின் மக்களவைத் தொகுதியான வாராணசியில் அமைந்துள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் சனிக்கிழமை இந்த நிகழ்ச்சியை பிரதமா் தொடக்கி வைத்து உரையாற்றுகிறாா்.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தையொட்டி, இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தமிழ் மொழியின் பாரம்பரியத்தையும், தமிழா்களின் பண்பாட்டையும் நவம்பா் 18 முதல் டிசம்பா் 16 வரையில் நடைபெறும் இந்நிகழ்ச்சி எடுத்துரைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.