ஆக்ரா: ஆக்ராவில் உள்ள தொல்லியல் ஆய்வுத் துறையால் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் தளங்களை நவம்பர் 19ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19 - 25 வரை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதையும் படிக்க.. உனக்கு செட்டே ஆக மாட்டேன்: தடாலடித்த லேடி சூப்பர் ஸ்டார்!
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆக்ராவில் உள்ள தாஜ் மகால், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இதர நினைவுச் சின்னங்களையும் நவம்பர் 19ஆம் தேதி கட்டணமின்றி சுற்றிப் பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
ஆனால், தாஜ் மகால் வளாகத்துக்குள் நுழைவதற்கான கட்டணம் மட்டும்தான் இலவசம். அதேவேளையில், தாஜ் மகாலின் நடுவில் இருக்கும் முக்கிய பகுதிக்கு சுற்றுலா பயணிகள் ரூ.200 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ராவில் உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கு சில நூறுகள் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதால், நாளை இப்பகுதிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருப்பவர்களும், சுற்றுலா செல்பவர்களுக்கும் இது நிச்சயம் ஒரு ஜாக்பாட்தான்.