இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அருணாசல் விமான நிலையம் எதிர்க்கட்சிகளுக்கான அடி! பிரதமர் மோடி

அருணாசலப் பிரதேசத்தின் விமான நிலையம் திறக்கப்பட்டது எதிர்க்கட்சிகளின் கன்னத்தில் அறைந்ததைப் போன்று உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

News image
நரேந்திர மோடி
Updated On :19 நவம்பர் 2022, 7:12 am

DIN

அருணாசலப் பிரதேசத்தின் விமான நிலையம் திறக்கப்பட்டது எதிர்க்கட்சிகளின் கன்னத்தில் அறைந்ததைப் போன்று உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

அருணாசலப் பிரதேச தலைநகர் இட்டா நகரில் அமைக்கப்பட்ட முதல் பசுமை விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.19) திறந்து வைத்தார். 

Story image

அப்போது பேசிய பிரதமர் மோடி, 2019ஆம் ஆண்டு இட்டா நகர் விமான நிலைய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும்போது அதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அருணாசல் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில்கொண்டு அடிக்கல் நாட்டுவதாகவும், அருணாசலில் விமான நிலையம் அமையாது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

தற்போது அவர்களின் (எதிர்க்கட்சிகள்) கூற்று தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்று அருணாசலில் விமான நிலையம் திறக்கப்பட்டது எதிர்க்கட்சிகளின் கன்னத்தில் அறைந்ததைப்போன்று உள்ளது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

அருணாசலில் திறக்கப்பட்ட முதல் பசுமை விமான நிலையம், ரூ.640 கோடி செலவில் 690 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.