தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

இனி தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்யலாம்: இந்திய ரயில்வே அறிவிப்பு!

ரயில் பயணங்களின் போது பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவுகளை ஐஆர்சிடிசி மூலமாக ஆர்டர் செய்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 

News image
Updated On :19 நவம்பர் 2022, 7:56 am



ரயில் பயணங்களின் போது பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவுகளை ஐஆர்சிடிசி மூலமாக ஆர்டர் செய்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐஆர்சிடிசி இன் தற்போதைய உணவு வழங்கல் மெனுவில் முதன்மையாக ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களான சப்பாத்தி, இட்லி, பிரியாணி போன்ற குறிப்பிட்ட உணவு வகைகள் மற்றும் பானங்கள் மட்டும் ரயில்களில் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், ரயில் பயணிகள் தங்களுக்கு பிடித்தமான உள்ளூர் உணவு வகைகள் மற்றும் பருவகால உணவுகள், நீரிழிவு நோய்க்கு ஏற்ற உணவுகள் மற்றும் குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவுகளை ஆர்டர் செய்து கொள்ளும்படி திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.