இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அருணாசலில் முதல் விமான நிலையத்தை இன்று திறந்துவைக்கிறார் மோடி!

அருணாச்சலப் பிரதேசத்தில் புதிதாகக் கட்டப்பட்ட டோன்யி போலா விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கிறார். 

News image
Updated On :19 நவம்பர் 2022, 5:33 am

DIN

புது தில்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் புதிதாகக் கட்டப்பட்ட டோன்யி போலா விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கிறார். 

2019 ஆம் ஆண்டில், பிரதமர் மோடி ஹோலோங்கியில் பசுமை விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட தேசு விமான நிலையத்தைத் திறந்து வைத்தார்.

ஹோலோங்கியில் உள்ள முனையம் சுமார் 955 கோடி ரூபாய் செலவில் 4100 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 200 பயணிகளை கையாளும் திறன் கொண்டது. 

அருணாசலில் முதல் பசுமை விமான நிலையமான இந்த விமான நிலையத்தின் கட்டுமானப் பணி 2020 டிசம்பரில் தொடங்கியது. ரூ.640 கோடி செலவில் 690 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்துக்கு டோனி போலோ என்று பெயரிடப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள 600 மெகாவாட்ஸ் காமெங் கீர் மீன் நிலையத்தையும் திறந்து வைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.