நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

'மங்களூரில் ஆட்டோவில் வெடித்தது...': காவல்துறை அதிர்ச்சி தகவல்

மங்களூரு ஆட்டோ  குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத செயல்தான் என்று கர்நாடக  டிஜிபி பிரவீன் சூட் உறுதியாக தெரிவித்துள்ளார்.

News image
Updated On :20 நவம்பர் 2022, 5:49 am

DIN

மங்களூரு ஆட்டோ  குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத செயல்தான் என்று கர்நாடக  டிஜிபி பிரவீன் சூட் உறுதியாக தெரிவித்துள்ளார்.

மங்களூரில் கரோடி அருகே ஆட்டோவில் வெடி  வெடித்து சிதறிய விவகாரத்தில், மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும், இந்த சம்பவம் ஒரு தீவிரவாத செயலாகும். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் நேற்று மாலை ஆட்டோவில் சென்ற பயணி கொண்டு வந்த குக்கர் பார்சலுக்குள் வெடிகுண்டுகள் இருந்தது உறுதியாகி உள்ளது. தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய வயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும், ஆட்டோவில் பயணித்த பயணி தன் அடையாளங்களை மறைத்துள்ளார். தன் பெயர் பிரேம் ராஜ் என்று கூறினாலும் அடையாள அட்டையில் வேறு பெயராக உள்ளது.  அவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.