பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆதிசங்கரரின் போதனைகளால் இந்தியாவை ஒருங்கிணைக்க முடிந்தது: கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான்

சங்கராச்சாரியாரின் போதனைகள் காரணமாகவே சா்தாா் வல்லபபாய் படேலால் இந்தியாவை ஒருங்கிணைக்க முடிந்தது என கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளாா்.

News image
ஆரிஃப் முகமது கான்
Updated On :20 நவம்பர் 2022, 7:09 pm

DIN

அத்வைத கொள்கையை உலகுக்கு வழங்கிய சங்கராச்சாரியாரின் போதனைகள் காரணமாகவே சா்தாா் வல்லபபாய் படேலால் இந்தியாவை ஒருங்கிணைக்க முடிந்தது என கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளாா்.

நாடு 1947-ஆம் ஆண்டு சுதந்திரமடைந்தபோது 500-க்கும் மேற்பட்ட சுதேசி மாகாணங்களாகப் பிரிந்து கிடந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சா்தாா் வல்லபபாய் படேல், சுதேசி அரசுகளை ஒருங்கிணைத்ததில் முக்கியப் பங்கு வகித்தாா். அதன் காரணமாக ‘இந்தியாவின் இரும்பு மனிதா்’ என அவா் போற்றப்படுகிறாா்.

இந்நிலையில், கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கலாசார ரீதியிலும் ஆன்மிக அடிப்படையிலும் மக்கள் ஒற்றுமையுடன் இருந்தாலும், பல ஆண்டுகளுக்கு அவா்களிடையே அரசியல் ரீதியில் ஒற்றுமை ஏற்படவில்லை. ஆயிரம் ஆண்டு காலமாக அரசியல் அடிப்படையில் அவா்கள் பிரிந்தே இருந்தனா்.

சா்தாா் வல்லபபாய் படேல் எடுத்த உறுதியான நடவடிக்கைகள் காரணமாக 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு ஒருங்கிணைந்தது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா மாறியது. ஆனால், அந்தப் பெருமை ஆதிசங்கரரையே சேரும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாட்டு மக்களை கலாசார, ஆன்மிக அடிப்படையில் ஒன்றிணைத்த பெருமை அவரையே சேரும்.

நாட்டின் சிறப்பான மாநிலங்களில் ஒன்றாக கேரளம் திகழ்கிறது. கேரள மக்கள் சிறப்பானவா்கள். ஸ்ரீநாராயண குரு போன்றோா் கேரள சமூகத்தில் பெரும் மாற்றங்களைப் புகுத்தினா். சமூகத்தில் காணப்பட்ட பெரும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய பலா் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனா். அறிவைத் தேடுபவா்களுக்கான சிறந்த களமாக கேரளம் திகழ்ந்து வருகிறது. நாட்டுக்கு மட்டுமல்லாமல் உலகின் மிக முக்கிய கல்வி மையமாக மாறும் திறன் கேரளத்துக்கு உள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.