அத்வைத கொள்கையை உலகுக்கு வழங்கிய சங்கராச்சாரியாரின் போதனைகள் காரணமாகவே சா்தாா் வல்லபபாய் படேலால் இந்தியாவை ஒருங்கிணைக்க முடிந்தது என கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளாா்.
நாடு 1947-ஆம் ஆண்டு சுதந்திரமடைந்தபோது 500-க்கும் மேற்பட்ட சுதேசி மாகாணங்களாகப் பிரிந்து கிடந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சா்தாா் வல்லபபாய் படேல், சுதேசி அரசுகளை ஒருங்கிணைத்ததில் முக்கியப் பங்கு வகித்தாா். அதன் காரணமாக ‘இந்தியாவின் இரும்பு மனிதா்’ என அவா் போற்றப்படுகிறாா்.
இந்நிலையில், கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கலாசார ரீதியிலும் ஆன்மிக அடிப்படையிலும் மக்கள் ஒற்றுமையுடன் இருந்தாலும், பல ஆண்டுகளுக்கு அவா்களிடையே அரசியல் ரீதியில் ஒற்றுமை ஏற்படவில்லை. ஆயிரம் ஆண்டு காலமாக அரசியல் அடிப்படையில் அவா்கள் பிரிந்தே இருந்தனா்.
சா்தாா் வல்லபபாய் படேல் எடுத்த உறுதியான நடவடிக்கைகள் காரணமாக 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு ஒருங்கிணைந்தது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா மாறியது. ஆனால், அந்தப் பெருமை ஆதிசங்கரரையே சேரும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாட்டு மக்களை கலாசார, ஆன்மிக அடிப்படையில் ஒன்றிணைத்த பெருமை அவரையே சேரும்.
நாட்டின் சிறப்பான மாநிலங்களில் ஒன்றாக கேரளம் திகழ்கிறது. கேரள மக்கள் சிறப்பானவா்கள். ஸ்ரீநாராயண குரு போன்றோா் கேரள சமூகத்தில் பெரும் மாற்றங்களைப் புகுத்தினா். சமூகத்தில் காணப்பட்ட பெரும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய பலா் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனா். அறிவைத் தேடுபவா்களுக்கான சிறந்த களமாக கேரளம் திகழ்ந்து வருகிறது. நாட்டுக்கு மட்டுமல்லாமல் உலகின் மிக முக்கிய கல்வி மையமாக மாறும் திறன் கேரளத்துக்கு உள்ளது’ என்றாா்.