எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஆம் ஆத்மிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய முக்கிய கட்சி!

அடுத்த மாதம் நிகழவுள்ள குஜராத் பேரவைத் தேர்தல் மற்றும் தில்லி மாநகராட்சி தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் புதிய பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது. 

News image
Updated On :21 நவம்பர் 2022, 9:39 am

DIN

புது தில்லி: அடுத்த மாதம் நிகழவுள்ள குஜராத் பேரவைத் தேர்தல் மற்றும் தில்லி மாநகராட்சி தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் புதிய பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது. 

தில்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்காக ஆத் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை பாஜக கட்சி சாடியுள்ளது. 

பாஜக மற்றும் தில்லி பாஜகவின் அதிகாரப்பூர்வ சுட்டுரை பக்கத்தில் வெளியிடப்பட்ட விடியோக்களில் யாம்ராஜ் சந்திரகுப்துடன் இரு மாநிலங்களைப் பற்றி உரையாடுவதைக் காணலாம். வாய்ப்பு தேடிய மனிதன் மக்களுக்கு எப்படி துரோகம் செய்கிறான் என்பதை சதிரகுப்த் விவரிக்கிறார். இதுதொடர்பாக 2 விடியோக்களை வெளியிட்டுள்ளது. 

மேலும் ஒரு விடியோவில் கேஜரிவால் போதையில்லா பஞ்சாப் என்று உறுதியளித்தார். ஆனால் தோல்வியடைந்தார் என்பது பற்றியும், யமுனை நதியை சுத்தம் செய்யத் தவறியது பற்றியும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த விடியோக்களுக்கும் பதிலளித்த அமைச்சர் மீனாட்சி லேகி, தில்லியில் ஒரு வருடத்தில் 54 ஆயிரம் பேர் மாசுபட்ட காற்றைச் சுவாசித்ததால் இறந்தனர். இன்று மன்னிப்பு கேட்கிறது ஆம் ஆத்மி, வாய்ப்பு கொடுத்தவர் ஏமாற்றிவிட்டார் என்றார். 

கேஜரிவாலுக்கு யார் வாய்ப்பு கொடுத்தாலும், பதிலுக்கு அவர் ஏமாற்றிவிட்டுவார் என்று தில்லி பாஜக எம்பி பர்வேஷ் வர்மா தெரிவித்தார். 

250 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தில்லி மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 7-ம் தேதி முடிவு அறிவிக்கப்படுகிறது. 

குஜராத் பேரவைத் தேர்தல் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும், அதே நேரத்தில் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.