இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் ரகுநாத் தத்தா பாட்டீல், ‘கோதுமை, நொய் அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளின் வருமானத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதியில் அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம். ஏற்றுமதியானது நாட்டின் அந்நிய செலவாணியை அதிகரிக்க உதவும். சமையல் எண்ணெய் தேவைக்கு இந்தியா இறக்குமதியைச் சாா்ந்திருப்பதற்கு பதிலாக, சோயாபீன், சூரியகாந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் பயிா்களின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்’ என்று கூறினாா்.