பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தேர்தல் ஆணையர் நியமனம்: அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

புதிய தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
Updated On :23 நவம்பர் 2022, 3:53 pm

DIN


புதிய தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தேர்தல் ஆணையத்தை சீர்திருத்தம் செய்யக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில், தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகளை அறிந்துகொள்ள ஆவணங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு தலைமை வழக்குரைஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர்களின் அதிகாரத்தை நிர்ணயிக்கும் தேர்தல் ஆணையச் சட்டம் 1991-ன் படி, அவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும் வரை பதவியில் நீடிக்கலாம் என வரையறை செய்யப்பட்டுள்ளது. 

ஆனால், சமீப காலங்களில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுபவர்கள் குறுகிய காலமே பதவியில் இருக்கும்படி உள்ளது. இதனால், இதில் சீர்திருத்தம் செய்யக்கோரி பொதுநல அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதி ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இந்நிலையில், புதிய தேர்தல் ஆணையராக கடந்த 19ஆம் தேதி அருண் கோயல் நியமிக்கப்பட்டார். அவர் எதன் அடிப்படையில் அருண் கோயல் நியமிக்கப்பட்டார், எந்தெந்த நடைமுறைகள் அதில் பின்பற்றப்பட்டன என்பது குறித்து அறிந்துகொள்வதற்காக அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாள் முழுவதும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வலியுறுத்தி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.