காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சீனாவில் புதிய உச்சம் தொட்டது கரோனா பாதிப்பு!

சீனாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :24 நவம்பர் 2022, 2:45 am

DIN

சீனாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் முதல்முறையாக கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது சீனாவில்தான். அதன்பிறகு உலகம் முழுவதும் பரவிய கரோனா தொற்றால் பல நாடுகள் சீரழிந்தது. லட்சக்கணக்கானோர் பலியாகினர்.

உலகம் முழுவதும் மூன்று அலைகள் ஏற்பட்ட போதிலும், கடுமையான பொதுமுடக்கத்தின் காரணமாக சீனா மட்டும் பெரும் பாதிப்பிலிருந்து தப்பித்தது.

இந்நிலையில், சமீபகாலமாக சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது.

நேற்று ஒரே நாளில் 31,454 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து இதுவே ஒருநாள் அதிக பாதிப்பாகும்.

தொடர்ந்து, பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு, போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு தீவிர கரோனா பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.