திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கர்நாடகம்-மகாராஷ்டிர எல்லைப் பிரச்னை: பாஜக - பாஜக இடையே வார்த்தைப் போர்

கர்நாடகம் - மகாராஷ்டிரம் மாநிலங்களுக்கு இடையே பல காலமாக நிலவும் எல்லைப் பிரச்னை, பாஜகவுக்கு மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

News image
கர்நாடகம்-மகாராஷ்டிர எல்லைப் பிரச்னை: பாஜக - பாஜக இடையே வார்த்தைப் போர்
Updated On :24 நவம்பர் 2022, 11:32 am

DIN


பெங்களூரு: கர்நாடகம் - மகாராஷ்டிரம் மாநிலங்களுக்கு இடையே பல காலமாக நிலவும் எல்லைப் பிரச்னை, பாஜகவுக்கு மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

வழக்கமாக இவ்விரு மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் பாஜக ஆட்சி நடந்து வந்தால், மற்றொரு மாநிலத்துடன் சப்தமாக சண்டைப் போடலாம். ஆனால் இரு மாநிலங்களிலும் தற்போது பாஜக ஆட்சிதான் நடக்கிறது.

அதற்காக சும்மா விட்டுவிட முடியுமா? கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிர துணை முதல்வர் ஃபட்னவீஸ் இடையே வார்த்தைப் போர் மூண்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் எந்தவொரு கிராமமும் அண்மையில் கர்நாடகத்துடன் இணைக்கப்படவில்லை என்று ஃபட்னவீஸ் கூறியிருந்தார். மேலும், எல்லையோரத்தில் இருக்கும் எந்த ஒரு கிராமத்துக்கும் தற்போது எங்குச் செல்வது என்ற நிலை இல்லை என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்த பசவராஜ் பொம்மை, பாஜக தலைவரின் கருத்து ஆத்திரமூட்டுவதாகவும், அவரது கனவு ஒரு போதும் நிறைவேறாது என்றும் தெரிவித்திருந்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாபூரில் இருக்கும் ஒரு சில பகுதிகளில் கன்னடம் பேசுபவர்கள்தான் அதிகம் இருப்பதாகவும் அவற்றை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டும் என்றும் பசவராஜ் பொம்மை வலியுறுத்தி வருகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.