புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கேஜரிவாலைக் கொல்ல பாஜக சதி: மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

குஜராத் மற்றும் தில்லி மாநகரத் தேர்தலுக்குப் பயந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலைக் கொல்ல பாஜக சதித் திட்டம் தீட்டியதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். 

News image
Updated On :25 நவம்பர் 2022, 8:57 am

DIN

குஜராத் மற்றும் தில்லி மாநகரத் தேர்தலுக்குப் பயந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலைக் கொல்ல பாஜக சதித் திட்டம் தீட்டியதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'குஜராத் மற்றும் தில்லி மாநகரத் தேர்தல்களில் தோல்வி பயம் காரணமாக, அரவிந்த் கேஜரிவாலைக் கொல்ல பாஜக சதி செய்கிறது. கேஜரிவாலின் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுகிறேன். இது நடந்துவிடக்கூடாது. 

பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, கேஜரிவால் மீது தாக்குதல் நடத்துமாறு தன்னுடைய ஆள்களிடம் கூறுகிறார். கேஜரிவாலைக்  கொல்ல முழுமையான சதித் திட்டத்தை செய்துள்ளார்.ஆனால், ஆம் ஆத்மி கட்சி இதுபோன்ற அற்ப அரசியலுக்கு பயப்படவிலை. அவர்களின் செயல்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்' என்று பதிவிட்டுள்ளார். 

தில்லி மாநகரத் தேர்தலிலும் ஊழல் நடைபெறுவதாக, தேர்தல் சீட் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்பட்ட பாஜகவின் புகாருக்கும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.