கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இரண்டாம் நிலை காவலா் தோ்வு: திருப்பத்தூர் மாவட்டத்தில் 1090 பேர் தேர்வு எழுதவில்லை!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவல் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பித்தவர்களில் காவலர் தேர்வில் 1090 பேர் தேர்வு எழுதவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

News image
Updated On :27 நவம்பர் 2022, 4:04 pm

DIN

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவல் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பித்தவர்களில் காவலர் தேர்வில் 1090 பேர் தேர்வு எழுதவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக காவல் துறையில் ஆயுதப்படை காவலா்கள், சிறப்பு காவல் படை காவலா்கள், சிறைக் காவலா்கள், தீயணைப்பாளா் என மொத்தம் 3,552 இரண்டாம் நிலை காவல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் கடந்த ஜூன் 30-ஆம் தேதி வெளியிட்டது. 

அதன்படி, கடந்த ஜூலை 7-ஆம் தேதி முதல் தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தின் மூலம் 2,99,887 ஆண்கள், 66,811 பெண்கள், 59 திருநங்கைகள் என மொத்தம் 3,66,727 போ் விண்ணப்பித்திருந்தனா்.

அவா்களுக்கான முதல் நிலை எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (நவ.27) தமிழ்நாடு முழுவதும் 295 தோ்வு மையங்களில் நடைபெற்றது. 

இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவல் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 1090 பேர் தேர்வு எழுதவில்லை, 6258 பேர் தேர்வு எழுதினர் என தகவல் வெளியாகி உள்ளது. 

இதேபோன்று வேலூர் மாவட்டத்தில் 12,577 பேர் பங்கேற்றனர், 2414 பேர் பங்கேற்கவில்லை. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5355 பேர் பங்கேற்றனர். 974 பேர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.