முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

தாராவி குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்: அதானி குழுமம் தேர்வு

ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று பெயர்பெற்ற மும்பையில் அமைந்திருக்கும் தாராவி குடிசைப் பகுதியை மேம்படுத்தும் திட்டத்துக்கான ஒப்பந்தத்துக்கு அதானி குழுமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

News image

தாராவி குடிசைப் பகுதி

Updated On :30 நவம்பர் 2022, 4:49 pm IST

மும்பை: ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று பெயர்பெற்ற மும்பையில் அமைந்திருக்கும் தாராவி குடிசைப் பகுதியை மேம்படுத்தும் திட்டத்துக்கான ஒப்பந்தத்துக்கு அதானி குழுமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

259 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் தாராவி குடிசைப் பகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டிருந்த நிலையில், உச்சபட்ச தொகையுடன் அதானி குழுமும் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை மேம்படுத்த ரூ.5,069 கோடி என்று நிர்ணயித்திருந்த அதானி குழுமம், இதே ஒப்பந்தத்தில் ஈடுபட்ட டிஎல்எஃப் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி, வெற்றி பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ரூ.2,025 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் திரட்டப்பட்டு, அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். பிறகு அது பரிசீலனை செய்து இறுதி அனுமதி வழங்கும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் இரண்டொரு வாரத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு இந்த ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதி வழங்கிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 20 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை நிறைவு செய்ய 7 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு தற்போது 6.5 லட்சம் குடிசைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த ஒப்பந்தப்புள்ளியில் 3 நிறுவனங்கள் பங்கேற்றன. ஒப்பந்தப்புள்ளியில் வெற்றி பெற்ற நிறுவனம்தான், தாராவி பகுதியில் உள்ள மக்களின் மறுவாழ்வுக்கும், கட்மைப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.