ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மார்ச் முதல் குஜராத்தில் இலவச மின்சாரம்: முதல்வர் பகவந்த் மான் தகவல்

வருகிற மார்ச் மாதம் முதல் குஜராத்தில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 நவம்பர் 2022, 11:33 am

DIN

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் வருகிற மார்ச் மாதம் முதல் குஜராத்தில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் நாளை(வியாழக்கிழமை) நடைபெறும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதையொட்டி மூன்று கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. முதல்கட்டத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. 

Story image

இந்நிலையில் இன்று ஆமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர், 'தில்லி மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதாக ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. அப்போது இது எப்படி சாத்தியம் என எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். ஆனால், ஆம் ஆத்மி சொன்னதைச் செய்தது. அதுபோலவே பஞ்சாபிலும். இன்று குஜராத்திலும் அந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் வருகிற மார்ச் மாதம் முதல் இலவச மின்சாரம் வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 'குஜராத்திற்கு முதல்முறையாக வந்தபோது குஜராத் மாடலில் இருந்து சிலவற்றைக் கற்றுக்கொள்ளலாம் என்று வந்தேன். ஆனால், உண்மையான குஜராத் மாடலை இப்போது பார்க்கிறேன். மக்களுக்கு 15,000 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்கள் 30,000 ரூபாயை சேமிக்கும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

குஜராத்தில் கண்டிப்பாக ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும். நாங்கள் பாஜகவின் பி டீம் என்று சிலரும் காங்கிரசின் பி டீம் என்று சிலரும் சொல்கின்றனர். ஆனால், நாங்கள் 130 கோடி மக்களின் ஏ டீம்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.