புல்வாமாவில் நடந்த சம்பவம்: தவறுதலாக வெடித்த துப்பாக்கி; ஒருவர் பலி

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி கையில் இருந்த துப்பாக்கி, எதிர்பாராதவிதமாக சுட்டதில் பொதுமக்களில் ஒருவர் பலியானார்.
புல்வாமாவில் நடந்த சம்பவம்: தவறுதலாக வெடித்த துப்பாக்கி; ஒருவர் பலி
புல்வாமாவில் நடந்த சம்பவம்: தவறுதலாக வெடித்த துப்பாக்கி; ஒருவர் பலி
Published on
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி கையில் இருந்த துப்பாக்கி, எதிர்பாராதவிதமாக சுட்டதில் பொதுமக்களில் ஒருவர் பலியானார்.

ஆசிஃப் அகமது பட்ரூ என்ற 25 வயது இளைஞர், துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மரணமடைந்தார். புல்வாமா மாவட்டம் ஹால் பகுதியில், காவலரின் பாதுகாப்புத் துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்ததில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததும் உடனடியாக பட்ரூ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com