அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

கம்போடியாவில் சிக்கியிருந்த 14 பேர் மீட்பு: மத்திய அரசு

சட்ட விரோத கும்பல்களால் கம்போடியாவில் கடத்தப்பட்ட 14 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 அக்டோபர் 2022, 8:35 am

DIN

சட்ட விரோத கும்பல்களால் கம்போடியாவில் கடத்தப்பட்ட 14 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

மியான்மர் நாட்டில் நடந்தது போலவே கம்போடியாவிலும் போலி வேலைவாய்ப்பு நடப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லாவோஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இதேபோன்ற மோசடியில் இந்தியர்கள் சிக்கியிருப்பதாக அரிந்தம் பக்சி தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து மாநில அரசுகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கம்போடியா மற்றும் லாவோஸ் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரங்களில் மூலம் வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.