சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

பிரபல தொழிலபதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மீண்டும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :6 அக்டோபர் 2022, 9:40 am

DIN

பிரபல தொழிலபதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மீண்டும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொலை மிரட்டல் வந்தது. சுமார் 8 முறை போன் அழைப்புகள் வந்ததாக அவர் தெரிவித்தார். 

ஏற்கெனவே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், அச்சுறுத்தல்கள் தொடா்பாக மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொண்ட மறுஆய்வைத் தொடா்ந்து, பாதுகாப்பு இசட் பிளஸ்-ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது. அவரது மனைவியான நீத்தா அம்பானி ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் உள்ளாா்.

இந்நிலையில் நேற்று(புதன்கிழமை) பிற்பகல் 12.57 மணிக்கும் மாலை 5.04 மணிக்கும் மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கிா்கான் பகுதியில் உள்ள அவரது ஹெச்.என்.ஆர்.எப். எனும் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு இரு அழைப்புகள் வந்துள்ளன. மருத்துவமனை கட்டடத்தை தகர்க்கப் போவதாகவும் மேலும், முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீத்தா அம்பானி, அவரது மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோரை கொலை செய்யவிருப்பதாகவும் மிரட்டல் வந்துள்ளது. 

மருத்துவமனை சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. கொலை மிரட்டல் விடுத்த பிகார் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மிஸ்ரா என்பவரைக் காவல்துறையின் கைது செய்துள்ளனர்.

மேலும், மருத்துவமனை மற்றும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 50 நாள்களில் முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு இரண்டாவது முறையாக மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பெளமிக் என்கிற நகை வியாபாரி முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலைமிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.