பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்க சத்தீஸ்கர் முதல்வரின் புதுமையான முயற்சி

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் சத்தீஸ்கரியா ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்துள்ளார்.
பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்க சத்தீஸ்கர் முதல்வரின் புதுமையான முயற்சி
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் சத்தீஸ்கரியா ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்துள்ளார்.

இந்த சத்தீஸ்கரியா ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் 14 வகையான பாராம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்பீர் சிங் உள் விளையாட்டரங்கில் பல்வேறு விதமான போட்டிகளை தொடங்கி வைத்த முதல்வர் பூபேஷ் பாகல் இதனை தெரிவித்தார். மகளிர் கபடி போட்டியினையும் அவர் தொடங்கி வைத்தார். 

கபடி போட்டியினை தொடங்கி வைத்து முதல்வர் பூபேஷ் பாகல் பேசியதாவது: “ மாநிலத்தின் முக்கியமான பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்கப்படுத்த வேண்டும். அந்தப் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com