சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

திருச்சி சூர்யா சிவாவுக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது: அறிவித்தார் நித்யானந்தா

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது அறிவித்துள்ளார் தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக் கொள்ளும் நித்யானந்தா.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:01 pm IST


திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது அறிவித்துள்ளார் தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக் கொள்ளும் நித்யானந்தா.

பாலியல் புகார், ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வரும் நித்யானந்தா, இந்தியாவிலிருந்து தப்பியோடி, தீவு ஒன்றை விலை கொடுத்து வாங்கி அதற்கு கைலாசா என்று பெயரிட்டு, தனி வங்கி, பாஸ்போர்ட் என பலவற்றையும் அறிவித்தார்.

தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்ட நித்யானந்தா, நாள்தோறும் ஆன்லைன் மூலமாக தனது பின்தொடர்வோருக்கு சொற்பொழிவுகள் ஆற்றி வந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின.

ஒரு நாள் அவர் இறந்தே விட்டார் என்று கூட செய்திகள் வந்தன. பிறகு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றன செய்திகள். ஆனால், நான் சாகவில்லை. சமாதியில்தான் இருக்கிறேன் என்றார் அவரே.

அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் உதவுமாறு இலங்கைக்கு நித்யானந்தா கடிதம் எழுதியிருப்பதாகவும் கூட செய்திகள் வந்தன.

இதையெல்லாம் தாண்டி, தற்போது நித்யானந்தாவின் விடியோ ஒன்றை திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா சிவா பகிர்ந்துள்ளார். அண்மையில்தான் சூர்யா சிவா திமுகவிலிருந்து விலகி பாஜகவில்இணைந்தார்.

அந்த விடியோவில், பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவாவுக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது கொடுத்துள்ளதாக நித்யானந்தாவே அறிவித்துள்ளார்.

இந்த விடியோவை பகிர்ந்திருக்கும் திருச்சி சூர்யா சிவா, சுவாமி நித்யானந்தாவால் கைலாசாவின் தர்மரட்சகர் விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.