உள்துறை அமைச்சர் முன்னிலையில் அழிக்கப்பட்ட 40 ஆயிரம் கிலோ போதைப்பொருள்கள்

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 40 ஆயிரம் கிலோ போதைப்பொருள்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இன்று (அக்டோபர் 8) அழிக்கப்பட்டது.
உள்துறை அமைச்சர் முன்னிலையில் அழிக்கப்பட்ட 40 ஆயிரம் கிலோ போதைப்பொருள்கள்
Published on
Updated on
1 min read

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 40 ஆயிரம் கிலோ போதைப்பொருள்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இன்று (அக்டோபர் 8) அழிக்கப்பட்டது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் 11 ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் குவாஹாட்டியில் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அதே வேளையில் அசாம் மாநில காவல் துறை அதிகாரிகளால் 8 ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவிலான போதைப் பொருள்கள் திரிபுரா மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. திரிபுரா மாநிலத்தில் 12000 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அருணாசலப் பிரதேசத்தில் 4000 கிலோ, மேகலாயாவில் 1600 கிலோ, மணிப்பூரில் 1900 கிலோ, மிசோரத்தில் 1500 கிலோ, நாகலாந்தில் 398 கிலோ போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com