பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிவசேனை கட்சியின் சின்னம் முடக்கம்

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியின் வில்-அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

News image
Updated On :8 அக்டோபர் 2022, 4:16 pm

DIN

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியின் வில்-அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

அந்தேரி(கிழக்கு) தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஷிண்டே-உத்தவ் தரப்பு சின்னம் கோரியதால் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சின்னம் தொடர்பாக ஆணையம் நடவடிக்கை எடுக்க தடை கோரிய உத்தரவ் தாக்கரேவின் மனுவை உச்சநீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 

சிவசேனை கட்சி எம்எல்ஏ ரமேஷ் லட்கே மறைவையொட்டி, அந்தேரி (கிழக்கு) தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அத்தொகுதிக்கு வரும் நவம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது. 

தேர்தலை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியும், அவருக்கு எதிரான அதிருப்தி எம்எல்ஏக்களைக் கொண்ட தற்போதைய முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினரும் முதல் முறையாக சந்திக்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.