சண்டீகரில் இந்திய விமானப்படையின் 90-வது ஆண்டு விழா நடந்து வருகிறது.
இந்திய விமானப்படை இன்று(சனிக்கிழமை) 90 ஆண்டுகளின் சிறப்பைக் குறிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. பஞ்சாபின் சண்டீகரில் இசைக்குழு அணிவகுப்புடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி, விமானப்படை தலைவர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்திய விமானப் படைத் தலைவர் விவேக் ராம் சவுதாரி கூறுகையில், "எங்கள் முன்னோடிகளின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தொலைநோக்குப் பார்வையால் பெறப்பட்ட பெருமைமிக்க பாரம்பரியத்தை நாங்கள் பெற்றுள்ளோம். விமானப்படையில் பணிபுரிந்த வீரர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் உரிமை நமக்கு உள்ளது. விமானப்படையின் நூற்றாண்டு நிறைவு விழா இன்னும் பத்தாண்டுகளில் நடத்தும் பொறுப்பு நமக்கு உள்ளது".
"அக்னிபத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப்படையில் விமானப்படை வீரர்களை சேர்ப்பது நம் அனைவருக்கும் சவாலாக உள்ளது. ஆனால் அதைவிட முக்கியமாக, இந்தியாவில் இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதற்கும், தேசத்தின் சேவையில் அவர்களை ஈடுபடுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும்." என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க:
இந்திய விமானப்படை வீரர்களுக்கான சீருடையை மாற்றி விமானப்படைத் தலைவர் வெளியிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


