எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சூரிய ஒளியில் 24 மணி நேரமும் மின்சாரம் பெறும் இந்தியாவின் முதல் கிராமம்: பிரதமர் அறிவிப்பு

குஜராத் மாநிலத்தின் மேஹ்சனா மாவட்டத்தின் மோதேரா கிராமத்தை 24 மணி நேரமும் சூரிய ஒளியினால் மின்சாரம் பெறும் இந்தியாவின் முதல் கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

News image
Updated On :9 அக்டோபர் 2022, 1:33 pm

DIN

குஜராத் மாநிலத்தின் மேஹ்சனா மாவட்டத்தின் மோதேரா கிராமத்தை 24 மணி நேரமும் சூரிய ஒளியினால் மின்சாரம் பெறும் இந்தியாவின் முதல் கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

குஜராத் மாநிலத்தில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை அறிவித்தார்.

பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: “ மோதேராவில் உள்ள சூரிய கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தற்போது சூரிய கோயில் மட்டுமல்லாமல் சூரிய ஒளியினால் 24 மணி நேரமும் மின்சாரம் பெறும் இந்தியாவின் முதல் கிராமமாக மோதேரா மாறியுள்ளது. மோதேராவில் 1,300க்கும் அதிகமான சூரிய ஒளி சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு அதிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது.” என்றார்.

இந்த ஆண்டு குஜராத் மாநிலம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.