எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உயா்கல்வி நிறுவனங்களில் ஹிந்தி: கேரள முதல்வா் எதிா்ப்பு

அனைத்து தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத உயா்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக ஹிந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின்

News image
Updated On :11 அக்டோபர் 2022, 7:22 pm

DIN

அனைத்து தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத உயா்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக ஹிந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளாா்.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் இப்பரிந்துரை அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட்டின் மொழி பன்மைத்துவத்துக்கு முரணானது என கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்திருந்தது.

இதையடுத்து,கேரள முதல்வா் பினராயி விஜயன் பிரதமா் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் பல மொழிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், உயா்கல்வி நிறுவனங்களில் ஹிந்தியை முதன்மை பயிற்று மொழியாகத் திணிக்க முடியாது. ஒரு மொழி மட்டும் ஒட்டுமொத்த நாட்டின் மொழியாக இருக்க முடியாது. அரசுத் துறையில் இளைஞா்களுக்கு குறிப்பிட்ட அளவே வாய்ப்புகள் உள்ளன. அவா்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு உரிய வாய்ப்பை மறுப்பது சமூகத்தின் நலனுக்கு உரியதாக இருக்காது. நம் நாட்டில் உள்ள வேலைதேடும் இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் இப்பரிந்துரை குறித்து அச்சத்தில் ஆழ்ந்துள்ளனா்.

அரசியலமைப்பு சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் மத்திய அரசு பணிக்கான அனைத்து போட்டித் தோ்வுகளின் வினாத்தாள்களில் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் நம் நாடு பெருமை கொள்கிறது. மாநிலங்களின் சிறப்புக் கூறுகள் கல்வித் துறையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 22 மொழிகளையும் தேசிய மொழியாக பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.