தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

மகாராஷ்டிரத்தில் பாஜக தலைவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை!

மகாராஷ்டிரத்தின், பீட் மாவட்ட பாஜக தலைவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :11 அக்டோபர் 2022, 9:45 am

DIN

மகாராஷ்டிரத்தின், பீட் மாவட்ட பாஜக தலைவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜகவின் பீட் மாவட்டப் பிரிவின் தலைவரான பகீரத் பியானி, மீரா நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் உரிமம் பெற்ற துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு பியானியின் குடும்பத்தினர், அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

50 வயதுடைய பாஜக தலைவர் கடந்த சில நாள்களாக உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்ததாக குடும்பத்தினர் கூறினர். 

மேலும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.