மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வேலையில்லா இளைஞர்கள் 2,000 பேரை சந்திக்கிறார் ராகுல் காந்தி!

ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று கர்நாடகத்தில் வேலைவாய்ப்பில்லா 2,000 இளைஞர்களை சந்தித்துப் பேசுகிறார். 

News image
Updated On :12 அக்டோபர் 2022, 7:10 am

DIN

ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று கர்நாடகத்தில் வேலைவாய்ப்பில்லா 2,000 இளைஞர்களை சந்தித்துப் பேசுகிறார். 

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ எனும் ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் செப்.7-ல் தொடங்கிய நடைபயணம், கேரளத்தை கடந்து தற்போது கர்நாடகத்தில் நடைபெற்று வருகின்றது. 

கர்நாடகத்தில் பரவலாக மழை பெய்து வரும் சூழலிலும், மழையில் நனைந்தபடி நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. 

இன்று காலை 6.30 மணிக்கு சித்ரதுர்கா மாவட்டம் சால்கெரே பகுதியில் நடைபயணத்தை தொடர்ந்த ராகுல், இரவு 7 மணிக்கு ஹிரேஹள்ளி என்ற பகுதியில் ஓய்வெடுக்கவுள்ளார்.

இதனிடையே இன்று கர்நாடகத்தில் சித்ரதுர்காவில் வேலைவாய்ப்பில்லாத சுமார் 2,000 இளைஞர்களை சந்தித்துப் பேசவுள்ளதாக அக்கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 

தற்போது 900 கிமீ வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாள்களுக்கு 12 மாநிலங்களில் 3,570 கி.மீ. நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.