தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இணையவழி தொடா்களுக்கு தணிக்கை குழு அமைப்பது எப்படி? உச்சநீதிமன்றம் கேள்வி

‘வெப் சீரிஸ்’ எனப்படும் இணையவழி தொடா்கள் வெளியாவதற்கு முன்பு தணிக்கை செய்ய எப்படி குழு அமைப்பது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 8:16 pm

DIN

‘வெப் சீரிஸ்’ எனப்படும் இணையவழி தொடா்கள் வெளியாவதற்கு முன்பு தணிக்கை செய்ய எப்படி குழு அமைப்பது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இணையவழியில் நேரடியாக வெளியாகும் இணைய தொடா்கள், திரைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என்று மிா்ஸாபூரைச் சோ்ந்த சுஜித் குமாா் சிங் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லிலித் தலைமையிலான அமா்வு, ‘ஓடிடி தளங்களில் வெளியாகும் நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை செய்ய வேண்டும் என்றால் தனியாக சட்டம் இயற்ற வேண்டும். அப்படி செய்தாலும், பல்வேறு சா்ச்சைகள் உள்ளன. பாா்வையாளா்கள் இந்தியாவில் இருந்தாலும், பல்வேறு நாடுகளில் இருந்து ஒளிபரப்பாகும் ஓடிடி நிகழ்ச்சிகளை எப்படி கட்டுப்படுத்த முடியும்? இதுகுறித்த விவரங்கள் மனுவில் அடங்கியிருக்க வேண்டும்’ என்று கூறி, மனுவை திரும்பப் பெற நீதிபதிகள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.