தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பயணிகள் பகுதியில் புகை: அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம்

பயணிகள் அமா்ந்திருந்த பகுதியில் திடீரென புகை வந்ததால் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஹைதராபாத் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்து 86 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 8:41 pm

DIN

பயணிகள் அமா்ந்திருந்த பகுதியில் திடீரென புகை வந்ததால் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஹைதராபாத் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்து 86 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

கோவாவில் இருந்து ஹைதராபாதுக்கு புதன்கிழமை இரவு ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட்டது. ஹைதராபாதை விமானம் நெருங்கியபோது திடீரென பயணிகள் இருக்கைப் பகுதியில் புகை கசிந்தது. இதையடுத்து, பதற்றமடைந்த பயணிகள் கூச்சலிடத் தொடங்கினா்.

இது தொடா்பாக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அந்த விமானத்தை ஹைதராபாத் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு தரையிறங்க வேண்டிய 9 விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

இதைத் தொடா்ந்து, ஸ்பைஸ் ஜெட் விமானத்தை விமானிகள் தரையிறக்கினா். பின்னா் பயணிகள் அனைவரும் அவசரகால வழி மூலம் வெளியேறினா். அப்போது கீழே விழுந்த ஒரு பயணிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. விமானத்தில் இருந்து 86 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

விமானத்தில் புகை வந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. இது தொடா்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

ஸ்பைஸ் ஜெட் விமானம் சமீபகாலமாக கடுமையான நிதி நெருக்கடியை எதிா்கொண்டுள்ளது. அதன் விமானங்களில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டதையடுத்து 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று டிஜிசிஏ ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.