குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி இரு நாள்களில் ஒய்வு!

கர்நாடக ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான ஹேமந்த் குப்தா நாளை மறுநாள் (அக்டோபர் 16) பணி ஓய்வு பெற உள்ளார்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 11:31 am

DIN

கர்நாடக ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான ஹேமந்த் குப்தா நாளை மறுநாள் (அக்டோபர் 16) பணி ஓய்வு பெற உள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான ஹேமந்த் குப்தா எப்போதுமே உச்ச நீதிமன்றத்தின் மிகப் பெரிய சொத்து என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் கூறியதாவது: “ ஹேமந்த் குப்தா எப்போதுமே அவரது சிறப்பான பங்களிப்பை கொடுக்கத் தவறியதில்லை. அவர் எப்போதுமே உச்ச நீதிமன்றத்தின் மிகப் பெரிய சொத்து. அவர் எல்லா நலமும் பெற்று வாழ நாங்கள் வாத்துகிறோம்.” என்றார்.

 ஓய்வு பெறுவது குறித்து நீதிபதிகள் முன்னிலையில் ஹேமந்த் குப்தா பேசியதாவது: “ தனிப்பட்ட முறையில் நீதிபதியாக எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளன. அனைத்து வழக்கறிஞர்களிடம் இருந்தும் எனக்கு உதவி கிடைத்தது. உண்மையில் 20 ஆண்டுகளாக நீதிபதியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களை கற்றுக் கொண்டேன். நீங்கள் அனைவரும் இத்தனை ஆண்டுகளாக எனது இந்தப் பயணத்தில் உதவியாக இருந்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.” என்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 2ல் ஹேமந்த் குப்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்வு பெற்றார். தற்போது அவரது ஓய்வானது உச்ச நீதி மன்றத்தில் தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை 28 ஆக குறைக்கும். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியையும் சேர்த்து 34 நீதிபதிகள் வரை இருக்கலாம்.

நீதிபதி ஹேமந்த் குப்தா நேற்று (அக்டோபர் 13) கர்நாடக ஹிஜாப் வழக்கில், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பதால் கர்நாடக உயர் நீதிமன்ற தடை செல்லும் என தீர்ப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.