பேரணியில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: மோடி தலைமையிலான அரசு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ல் நீக்கியது. நீங்கள் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்படும் என்று என்றாவது நினைத்திருக்கிறீர்களா? காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 அப்போதைய பிரதமர் நேருவினால் கொண்டு வரப்பட்டதால் இந்த விஷயத்தில் மௌனமாக மட்டுமே இந்துள்ளது. அதேபோல அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்திலும் மோடி தலைமையிலான அரசு வெற்றி பெற்று ராமர் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சட்டப்பிரிவு 370 ஆக இருந்தாலும் சரி அல்லது ராமர் கோயில் கட்டுவதாக இருந்தாலும் சரி முடியாது என இருந்ததை மோடி தலைமையிலான அரசு சாத்தியமாக்கியுள்ளது என்றார்.