ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஓலா, உபொ் நிறுவனங்கள் ஆட்டோ சேவைகளை இயக்க கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி

கர்நாடகத்தில் ஓலா, உபொ் நிறுவனங்கள் ஆட்டோ சேவைகளை இயக்க கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

News image
Updated On :15 அக்டோபர் 2022, 3:50 am

DIN

கர்நாடகத்தில் ஓலா, உபொ் நிறுவனங்கள் ஆட்டோ சேவைகளை இயக்க அந்த மாநில உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

வாடகை ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு ஓலா, உபொ் போன்ற கைப்பேசி செயலி வழி வாகன சேவை நிறுவனங்களுக்கு கா்நாடக போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

மேலும், கர்நாடக அரசின் உத்தரவை மீறி இயக்கப்பட்ட அந்நிறுவனங்களின் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்நிலையில் போக்குவரத்துத் துறையின் இந்த உத்தரவுக்கு எதிராக ஓலா, உபொ் நிறுவனங்கள் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.

இவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஓலா, உபொ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கும் வரை அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது. இதன் மூலமாக ஓலா, உபொ் நிறுவனங்கள் ஆட்டோ சேவைகளை இயக்க அனுமதி அளித்துள்ளது. 

மேலும், கட்டணம் குறித்து கர்நாடக அரசு முடிவெடுக்கும் வரை, அரசு நிர்ணயித்த தொகையைவிட 10 சதவீதம் கூடுதலாக கட்டணம் நிர்ணயித்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.