சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஆம்புலன்ஸ் மோதி விபத்து: தாய் மற்றும் மகள் பலியான சோகம்

மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்டத்தில்  தாய் மற்றும் அவரது 10 வயது மகள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News image
Updated On :15 அக்டோபர் 2022, 1:56 pm

DIN

மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்டத்தில்  தாய் மற்றும் அவரது 10 வயது மகள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தானது கொல்கத்தா மற்றும் சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 16-இல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தினால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலை 16-இல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இந்த விபத்து குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: இந்த சம்பவம் இன்று (அக்டோபர் 15) காலை 6.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. தாய் மற்றும் மகள் சாலையோரத்தில் பேருந்திற்காக காத்திருந்தபோது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் அவர்கள் இருவரின் மீதும் மோதியது. ஆம்புலன்ஸில் நோயாளிகள் யாரும் இல்லை. இந்த விபத்தில் தாய் மற்றும் அவரது மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் இது போன்ற விபத்துகள் நடப்பது குறித்து புகார் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர். ஒரு கட்டத்தில் போராட்டத்தின் தீவிரம் அதிகமாகி விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸுக்கு மக்கள் தீ வைத்தனர். விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.