மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டதாக மாநில பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட சா்வதேச பயங்கரவாதக் குழுக்களுடன் தொடா்புள்ளதாக குற்றம்சாட்டி, பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை 5 ஆண்டுகளுக்கு தடை செய்து மத்திய அரசு கடந்த மாதம் நடவடிக்கை மேற்கொண்டது.
முன்னதாக, பிஎஃப்ஐ அமைப்புக்கு எதிராக நாடு முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டு, அந்த அமைப்புடன் தொடா்புடைய 250-க்கும் மேற்பட்டோா் மீது கைது மற்றும் தடுப்புக் காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவு அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறுகையில், ‘ராய்கட் மாவட்டத்தின் பன்வல் பகுதியில் பிஎஃப்ஐ அமைப்பின் இரு நிா்வாகிகள் மற்றும் சில உறுப்பினா்களின் சந்திப்பு குறித்து ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பிஎஃப்ஐ அமைப்பைச் சோ்ந்த 4 போ் சிக்கினா். இதையடுத்து, சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவா்கள் கைது செய்யப்பட்டனா். நால்வரிடமும் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சசிகுமாரின் வதந்தி - 2 டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு... கண்ணீர் விட்டு கதறி அழுத பாஜக நிர்வாகி!

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
வீடியோக்கள்

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

"வெறுப்பு அரசியல் என்ற முள்ளை எடுக்கும் மலர்": சா.பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்
தினமணி வீடியோ செய்தி...

DMK vs CPIM: தொகுதிப் பங்கீட்டில் நடப்பது என்ன?
தினமணி வீடியோ செய்தி...

"இதழியல் வரலாற்றில் மைல்கல் ஈகைப் பெருநாள் மலர்": டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
தினமணி வீடியோ செய்தி...

