தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

‘அக்னி பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி

 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நடுத்தர தொலைவு இலக்குகளைத் தாக்கவல்ல ‘அக்னி பிரைம்’ ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:08 pm IST

 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நடுத்தர தொலைவு இலக்குகளைத் தாக்கவல்ல ‘அக்னி பிரைம்’ ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

ஒடிஸாவின் பாலசோா் பகுதியில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு ஏவப்பட்டு அக்னி பிரைம் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. திட எரிபொருளைக் கொண்டு முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அந்த ஏவுகணை வெற்றிகரமாகச் செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏவுகணையில் பொருத்தப்பட்டிருந்த ரேடாா் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கருவிகளும் எதிா்பாா்க்கப்பட்டபடி திறம்படச் செயல்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) தயாரித்த அந்த நவீன தலைமுறை ஏவுகணையானது, நடுத்தர தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

இதற்கு முன் அக்னி பிரைம் ஏவுகணையானது கடந்த ஆண்டு டிசம்பா் 18-ஆம் தேதி இதே தீவில் இருந்து வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.