ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தெலங்கானாவில் ராகுல் காந்தி! 50-வது நாள் நடைபயணம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணம் தெலங்கானா மாநிலத்தில் இன்று தொடங்கியுள்ளது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 3:42 am

DIN

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணம் தெலங்கானா மாநிலத்தில் இன்று தொடங்கியுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா்.

தமிழகத்தில் தொடங்கிய நடைபயணமானது கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தை கடந்து இன்று தெலங்கானா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. கடந்த 50 நாள்களாக 4 மாநிலங்களில் 1,230 கி.மீட்டர் தூரத்தை நடைபயணக் குழுவினர் கடந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபயணமானது மூன்று நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் பதவியேற்பு விழாவிலும் ராகுல் காந்தி பங்கேற்றார்.

இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் நாராயணப்பேட்டை மாவட்டத்தில் ராகுல் காந்தியின் 50வது நாள் நடைபயணம் தொடங்கியுள்ளது.

வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி ஹைதராபாத்தை நடைபயணம் சென்றடைகிறது. அன்று சார்மினாரில் தேசியக் கொடியை ஏற்றும் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.