மத்தியப் பிரதேசத்தில் காந்தி சிலை சேதம்

மத்தியப் பிரதேசத்தில் மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தில் மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம், கந்த்வா மாவட்டத்தில் உள்ளது ராணா மொஹல்லா எனும் கிராமம். இக்கிராமத்தில் மகாத்மா காந்தி சிலை கடந்த 2000ஆம் ஆண்டில் கிராம பஞ்சாயத்தால் நிறுவப்பட்டது. இந்த சிலையை வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்திள்ளனர். இதனைக் கண்ட அக்கிராமத்தினர் ஜாவர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்த்வா மாவட்டத்தில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கிராம சர்பஞ்ச் குன்வர்ஜி கூறியதாவது: நேற்றிரவு சிலர் மகாத்மா காந்தி சிலையின் தலையை உடைத்துள்ளனர். 

இந்த வழக்கு உள்ளூர் போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ஜாவர் காவல் நிலைய அதிகாரி சிவராம் ஜாட் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இந்த விவகாரத்தில், கிராம பஞ்சாயத்து புகாரின் பேரில், ஜாவர் காவல் நிலையத்தில் 3 மற்றும் 427 பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com