மேற்கு வங்க மாநிலம் அலிபுர்தௌர் மாவட்டத்தில், ஒரு வணிக நிறுவனத்தில் பெண் ஒருவர் சாக்லேட் திருடிய விடியோ வைரலானதைத் தொடர்ந்து, அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி, சாக்லேட் திருடும் விடியோ வைரலானதால், அதிர்ச்சி அடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சுபாஷ்பள்ளி என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இதையும் படிக்க.. காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றது ஏன்? கல்லூரி மாணவி வாக்குமூலம்
கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவந்த கல்லூரி மாணவியின் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து அவரது தந்தை கூறுகையில், கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அவர் தனது சகோதரியுடன் அருகில் உள்ள கடைக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவர் சாக்லேட் திருடும் போது பிடிபட்டிருக்கிறார். இதற்காக கடை உரிமையாளரிடம் உரிய பணத்தையும் கொடுத்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் சாக்லேட் திருடும் போது மாட்டிக் கொள்வது மற்றும் மன்னிப்புக் கேட்கும் விடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவர் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள், அந்த வணிக நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு, விடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


