புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காங்கிரஸ் யாத்திரை: ராகுலிடம் தேசியக் கொடியை ஒப்படைக்கிறாா் முதல்வா் ஸ்டாலின்

காங்கிரஸின் ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக, அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்படைக்கவுள்ளாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 12:25 am

DIN

காங்கிரஸின் ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக, அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்படைக்கவுள்ளாா்.

‘பாரத் ஜோடோ’ (இந்தியாவை ஒருங்கிணைப்போம்) யாத்திரையை வரும் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் காங்கிரஸ் தொடங்கவுள்ளது. அதில் ராகுல் காந்தி கலந்துகொண்டு யாத்திரையைத் தொடக்கிவைக்கிறாா். அதற்கு முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறவுள்ள முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிராா்த்தனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொள்கிறாா்.

கன்னியாகுமரியில் காங்கிரஸ் யாத்திரை தொடங்கும்போது, ராகுலிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸின் இந்த யாத்திரை காஷ்மீரின் ஸ்ரீநகா் வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.