மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தில்லியில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஹெராயின் மீட்பு: 2 பேர் கைது

வடக்கு தில்லியின் ரோகிணியில் ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர். 

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:45 am

DIN


வடக்கு தில்லியின் ரோகிணியில் ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர். 

போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி மணீஷ்(34), அவரது கூட்டாளி டிங்கு ஆகியோர் பயணித்த காரை மறித்து கைது செய்ததாக காவல்துறை துணை ஆணையம் விசித்ரா வீர் தெரிவித்தார். 

அவர்களிடமிருந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 1.3 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டது. 

கிழக்கு தில்லியில் உள்ள நந்த் நாக்ரியில் வசிக்கும் மணீஷ், கடந்த 2014ம் ஆண்டு லாஹோரி கேட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு 5 ஆண்டுகள் சிறையில் இருந்தார். 

இரண்டாவது குற்றவாளியான டிங்கு (34), ஷாஹ்தராவில் வசிப்பவர் மற்றும் மணீஷின் குழந்தைப் பருவ நண்பர்.

இவர் முன்பு கலால் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தில்லி-என்சிஆர் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் டிங்கு மணீஷுக்கு உதவியதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.