பெங்களூருவில் கனமழை: மின்சாரம் பாய்ந்து பெண் பலி

பெங்களூருவில் சித்தாபுராவில் மின்சாரம் பாய்ந்து பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
பெங்களூருவில் கனமழை: மின்சாரம் பாய்ந்து பெண் பலி
Updated on
1 min read

பெங்களூருவில் சித்தாபுராவில் மின்சாரம் பாய்ந்து பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செப்டம்பர் 5ஆம் தேதி இரவும் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துகொண்டு, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தும், வாகனங்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

இந்நிலையில் சித்தாபுராவில் மழைநீரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சாலையில், மின்கம்பத்தில் சிக்கிய 23 வயது பெண் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

திங்கள்கிழமை இரவு, பாதிக்கப்பட்ட பெண் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இருசக்கர வாகனம் திடீர் பழுதடைந்ததால், எதிர்பாரதவிதமாக பெண் மின் கம்பத்தைத் தொட்டுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்தாக கூறப்படுகிறது. உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இறந்தவர் தனியார்ப் பள்ளி ஒன்றில் நிர்வாக பிரிவில் பணியாற்றி வந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com