டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பயிர்ச்சேதம்: விவசாயிகளுக்கு ரூ.192 கோடி ஒப்புதல்

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் பயிர்ச் சேதத்திற்கு இழப்பீடாக ரூ.192 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :6 செப்டம்பர் 2022, 4:53 pm

DIN


உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் பயிர் சேதத்திற்கு இழப்பீடாக ரூ.192 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச முதல்வர் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று செவ்வாய்க் கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில், பயிர் சேதத்தை சந்தித்த விவசாயிகளுக்காக ரூ.192.57 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பயிர் சேதத்தை தவிர்ப்பதற்காக கிடங்குகள் கட்டுதல் போன்றவை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வேளாண் துறை மூலம், உயிரி மற்றும் ரசாயன உரங்கள் மானிய விலையில் வழங்கப்படும். மேலும், பறவைகள், பூச்சிகள், முறையற்ற சேமிப்பு, போன்றவை மூலம் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. 

 2022 முதல் 2027 வரை விவசாயிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.