8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

குடும்பப் பகை: சிறுமியின் கழுத்தை அறுத்து, ஆசிட் ஊற்றிய தாய்மாமன்

ஆந்திர மாநிலத்தில், குடும்பப் பகை காரணமாக, சிறுமியின் கழுத்தை அறுத்து, அவரைக் கொலை செய்வதற்காக வாயில் ஆசிட் ஊற்றிய தாய்மாமன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

குடும்பப் பகை: சிறுமியின் கழுத்தை அறுத்து, ஆசிட் ஊற்றிய தாய்மாமன்

Published On :1 பிப்ரவரி 2024, 3:45 pm IST


ஆந்திர மாநிலத்தில், குடும்பப் பகை காரணமாக, சிறுமியின் கழுத்தை அறுத்து, அவரைக் கொலை செய்வதற்காக வாயில் ஆசிட் ஊற்றிய தாய்மாமன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் வேலைக்காக வெளியே சென்றிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த சிறுமியின் தாய்மாமன் நாகராஜைப் பார்த்த சிறுமி, வீட்டுக்குள் இருந்த கழிப்பறைக்குள் சென்று ஒளிந்து கொண்டுள்ளார். 

அங்கேச் சென்ற நாகராஜ், சிறுமியின் கழுத்தை அறுத்தும், அங்கிருந்த ஆசிட்டை எடுத்து அவரது வாயில் ஊற்றியும் கொலை செய்ய முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினரைப் பார்த்தும், சிறுமிக்கு உதவுவது போல நகராஜ் நடித்துள்ளார்.

ஆனால் தனது வாயில் ஆசிட் ஊற்றியது நாகராஜ்தான் என்று சிறுமி சைகை மூலம் அக்கம் பக்கத்தினருக்குக் கூறியதைத் தொடர்ந்து, மக்கள் சேர்ந்து நாகராஜைப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.