இந்தியாவில் செயல்பட்டு வரும் விமான சேவை நிறுவனங்களின் மொத்த நஷ்டம் இந்த நிதியாண்டில் ரூ.17,000 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2022-23-ம் நிதி ஆண்டில் விமான சேவை நிறுவனங்களின் நஷ்டம் ரூ.15,000 கோடியிலிருந்து ரூ.17,000 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை நிறுவனங்களில் நடைமுறைச் செயலில் 45% ஆக இருக்கும் விமான எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் விலை அதிகரித்ததே விமான சேவை நிறுவனங்களின் நஷ்டம் அதிகரிக்க காரணம் என புகார் எழுந்துள்ளது.
விமான சேவை நிறுவனங்கள் நடைமுறைச் செலவினத்தில் 35%-லிருந்து 50% அளவுக்கு டாலரில் செலுத்த வேண்டியுள்ளது. ரூபாய் கணக்கில் டாலரின் மாற்றுமதிப்பு உயர்வதாலும் விமான சேவை நிறுவனங்களின் நஷ்டம் அதிகரிக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் விமான சேவை நிறுவனங்களின் மொத்த கடனளவும் ரூ. 1 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இண்டிகோ நிறுவனம் ரூ.1,064 கோடியும், ஸ்பைஸ்ஜெட் ரூ.789 கோடியும் நஷ்டம் அடைந்துள்ளன.