அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

விமான நிறுவனங்களின் மொத்த நஷ்டம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் செயல்பட்டு வரும் விமான சேவை நிறுவனங்களின் மொத்த நஷ்டம் இந்த நிதியாண்டில் ரூ.17,000 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 3:46 pm IST

இந்தியாவில் செயல்பட்டு வரும் விமான சேவை நிறுவனங்களின் மொத்த நஷ்டம் இந்த நிதியாண்டில் ரூ.17,000 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் நிதி ஆண்டில் விமான சேவை நிறுவனங்களின் நஷ்டம் ரூ.15,000 கோடியிலிருந்து ரூ.17,000 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை நிறுவனங்களில் நடைமுறைச் செயலில் 45% ஆக இருக்கும் விமான எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் விலை அதிகரித்ததே விமான சேவை நிறுவனங்களின் நஷ்டம் அதிகரிக்க காரணம் என புகார் எழுந்துள்ளது.

விமான சேவை நிறுவனங்கள் நடைமுறைச் செலவினத்தில் 35%-லிருந்து 50% அளவுக்கு டாலரில் செலுத்த வேண்டியுள்ளது. ரூபாய் கணக்கில் டாலரின் மாற்றுமதிப்பு உயர்வதாலும் விமான சேவை நிறுவனங்களின் நஷ்டம் அதிகரிக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில் விமான சேவை நிறுவனங்களின் மொத்த கடனளவும் ரூ. 1 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இண்டிகோ நிறுவனம் ரூ.1,064 கோடியும், ஸ்பைஸ்ஜெட் ரூ.789 கோடியும் நஷ்டம் அடைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.