உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற புனிதத் தலமான கேதார்நாத் கோயிலுக்குக் கடந்த 126 நாள்களில் 11 லட்சம் பக்தர்கள் வருகை தந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி மயூர் தீட்சித் கூறுகையில்,
இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றுநோய் காரணமாக யாத்திரை பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை யாத்திரை முறையாக நடைபெற்று வருகின்றது.
கடந்த 2019ஆம் ஆண்டில் 10 லட்சம் பக்தர்கள் வருகைக்கான சாதனையை இந்தாண்டு முறியடித்துள்ளது.. 126 நாள்களில் 11 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.
ஆரம்பக் கட்டத்தில் அதிகப்படியான கூட்டத்தால் சிக்கல்கள் ஏற்பட்டன. தூய்மைப் பணியிலும் சில குறைபாடுகள் இருந்தன. ஆனால் அனைத்து ஏற்பாடுகளும் சரி செய்யப்பட்டுள்ளன.
ஐநூறுக்கும் மேற்பட்ட துப்பரவு பணியாளர்கள் ருத்ரபிரயாக் முதல் கேதார்நாத் வரை தங்கள் சேவைகளை வழங்கி வருகின்றனர். பக்தர்களுக்கு நடைபாதை உள்ளிட்ட சிறந்த வசதிகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், கேதார்நாத் பயணத்தில் எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது என்று அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை ஏராளமான பயணிகள் வந்துள்ளனர். மேலும் பயணத்திற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. அனைத்து உணவகங்கள், விடுதிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்படுகின்றன.
இந்தாண்டு, கேதார்நாத்துக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
கச்சா எண்ணெய் விலை 5% சரிவு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிஅமலாக்கத் துறையில் ஆஜர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



