தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சாதனை முறியடிப்பு: 126 நாள்களில் 11 லட்சம் பக்தர்கள் கேதார்நாத் வருகை!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற புனிதத் தலமான கேதார்நாத் கோயிலுக்குக் கடந்த 126 நாள்களில் 11 லட்சம் பக்தர்கள் வருகை தந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 9:24 am

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற புனிதத் தலமான கேதார்நாத் கோயிலுக்குக் கடந்த 126 நாள்களில் 11 லட்சம் பக்தர்கள் வருகை தந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி மயூர் தீட்சித் கூறுகையில், 

இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றுநோய் காரணமாக யாத்திரை பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை யாத்திரை முறையாக நடைபெற்று வருகின்றது.

கடந்த 2019ஆம் ஆண்டில் 10 லட்சம் பக்தர்கள் வருகைக்கான சாதனையை இந்தாண்டு முறியடித்துள்ளது.. 126 நாள்களில் 11 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். 

ஆரம்பக் கட்டத்தில் அதிகப்படியான கூட்டத்தால் சிக்கல்கள் ஏற்பட்டன. தூய்மைப் பணியிலும் சில குறைபாடுகள் இருந்தன. ஆனால் அனைத்து ஏற்பாடுகளும் சரி செய்யப்பட்டுள்ளன. 

ஐநூறுக்கும் மேற்பட்ட துப்பரவு பணியாளர்கள் ருத்ரபிரயாக் முதல் கேதார்நாத் வரை தங்கள் சேவைகளை வழங்கி வருகின்றனர். பக்தர்களுக்கு நடைபாதை உள்ளிட்ட சிறந்த வசதிகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மேலும், கேதார்நாத் பயணத்தில் எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது என்று அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இதுவரை ஏராளமான பயணிகள் வந்துள்ளனர். மேலும் பயணத்திற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. அனைத்து உணவகங்கள், விடுதிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்படுகின்றன. 

இந்தாண்டு, கேதார்நாத்துக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.