வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுவரும் நிலையில், ஒடிசாவில் செப்டம்பர் 13-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்காள விரிகுடாவில் வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசாவின் கடலோரப் பகுதியில் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 13 வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று ஐஎம்டி கணித்துள்ளது. மேலும் செப்டம்பர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் தெற்கு பகுதிகளில் சில இடங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டது.
செப்டம்பர் 10-ஆம் தேதி காலை 8.30 மணி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி காலை 8.30 மணி வரை மல்கங்கிரி, கோராபுட், நபரங்பூர், ராயகடா, கலாஹண்டி, காந்தமால், கஜபதி, கஞ்சம், குர்தா, நாயகர் மற்றும் கட்டாக் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று புபனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .
செப்டம்பர் 11ஆம் தேதி காலை 8.30 மணி முதல் 24 மணி நேரத்திற்கு நபரங்பூர், கலஹண்டி, கந்தமால், நுவாபாடா, போலங்கிர், சோனேபூர், பௌத், நயாகர், பூரி, குர்தா மற்றும் கஞ்சம் ஆகிய மாவட்டங்களில் இதேபோன்ற வானிலை நிலவும்.
நிலைமையை எதிர்கொள்ள அனைத்து ஆட்சியர்கள் தயாராக இருக்குமாறு சிறப்பு நிவாரண ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


